கலாஷேத்ராவின் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, கலாஷேத்ராவில் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி விசாரணையை தொடங்கினார். குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியரை பணி நீக்கம் செய்யும்படி போராட்டத்தில் மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மாணவிகளின் இந்த போராட்டத்தில் பிக்பாஸ் புகழ் விக்ரமன், நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எனது ஆதரவை தெரிவிக்க சென்றிருந்தேன். அவர்களுக்கு நீதி கிடைக்க முடிந்தவரை ஆதரவளிப்பதாக உறுதியளித்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.