தமிழக சட்டப்பேரவை கூட்டமானது நேற்று ஆளுநர் ரவியின் உரையோடு தொடங்கியது. அதில் திராவிடம், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும் என்ற வார்த்தையையும் ஆளுநர் தவிர்த்ததால் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் உரைக்கு கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அவையில் பெரும் பரபரப்பு நிலவியது நிலையில் ஆளுநர் உரையாற்றிய பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

அவர் ஆளுநர் அரசின் கொள்கைக்கு மாறாக தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை படிக்காமல் புறக்கணித்தது மிகவும் வருத்தமான விஷயம். அதோடு அச்சடிக்கப்பட்ட உரையை படிக்காத ஆளுநரின் உரையை உடனடியாக நீக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறினார். அதன்படி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு ஆளுநர் உடனடியாக அவையை புறக்கணித்துவிட்டு சென்றார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கருணாநிதியைவிட ஸ்டாலின் ஆபத்தானவர் என்று தான் சொன்னதை அவர் நிரூபித்துவிட்டார் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் ஏற்பு இல்லாத விஷயங்களை ஆளுநர்கள் பேசாமல் இருக்கலாம். இது புதிது கிடையாது. ஆனால், ஆளுநர் உரையின்போது CM ஸ்டாலின் பேசியது மரபு கிடையாது. நான் முன்பு சொன்னதை போல ஸ்டாலின் மோசமாக நடந்து வருகிறார். தன்னை திருத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.