வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால்  தமிழகத்தில் பல்வேறு  மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மன்னார் வளைகுடா நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், ஒருசில  மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று  (பிப். 03) விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.