கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வேண்டுமென கதாநாயகிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். பிரியங்கா சோப்ரா அண்மையில் அளித்த பேட்டியில் ஹீரோவுக்கு இணையாக தனக்கு சம்பளம் கிடைத்துள்ளது எனவும் இந்த உயரத்துக்கு வர தனக்கு 20 வருடங்கள் ஆகியுள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.

இதுபற்றி நடிகை சுருதிஹாசனிடம் கேட்டபோது, “பிரியங்கா சோப்ரா ஹீரோவுக்கு இணையான சம்பளம் பெற்றதன் வாயிலாக அற்புதத்தை நிகழ்த்தி உள்ளார். நாங்கள் இன்னும் உழைத்துக்கொண்டே இருக்கிறோம். நம் சினிமா துறையில் சமமான சம்பளம் பற்றி எந்த பேச்சும் எழுவதில்லை. ஹீரோக்களுக்கு சமமாக கதாநாயகிகளுக்கு சம்பளம் கிடைக்கும் நாள் வர வேண்டும் என எதிர்பார்க்கிறேன்” என பதிலளித்தார்.