பிரபல மலையாள நடிகராக வலம் வரும் உன்னி முகுந்தன், தமிழில் தனுசின் சீடன் படத்தில் நடித்திருந்தார். உன்னி முகுந்தன் மீது கோட்டயத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கூறியதாவது “ஒரு படத்தில் நடிக்க வைப்பதாகவும், கதையை கேட்க தன் வீட்டுக்கு வருமாறும் அவர் என்னை அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்” என போலீசில் புகாரளித்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் தனக்கு ரூ.25 லட்சம் கொடுத்தால் புகாரை வாபஸ் பெறுகிறேன் என அந்த பெண் நிர்ப்பந்தம் செய்வதாக உன்னிமுகுந்தன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதன்பின் அவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு கோர்ட்டு தடைவிதித்தது. அதோடு இளம் பெண்ணிடம் சமரசம் பேசி தீர்வு கண்டுவிட்டதாக உன்னிமுகுந்தன் வழக்கறிஞர் கோர்ட்டில் தெரிவித்து விசாரணைக்கு தடை கோரி மனு தாக்கல் செய்தார்.

எனினும் பாதிக்கப்பட்ட பெண் சமரச தீர்வு ஏற்படவில்லை எனவும் உன்னிமுகுந்தன் தொடர்ந்து தன்னை அவமானப்படுத்துவதாகவும் கோர்ட்டில் தெரிவித்திருந்தார். இதுபற்றி விசாரித்த ஐகோர்ட்டு உன்னிமுகுந்தன் அளித்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் அவருக்கு எதிரான வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கும் எனவும் அறிவித்தது.