பெங்களூருவைச் சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவரின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. தனது மகளை  மடியில் சுமந்தபடி சாலைகளில் ஆட்டோ ஓட்டும் காட்சி, மக்களை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. ஒரு கையால் குழந்தை கேரியர் பையை தாங்கி, மற்றொரு கையால் ஆட்டோ ஓட்டும் இந்த தந்தையின் அர்ப்பணிப்பு, குழந்தைகளுக்காக ஒரு தந்தை எவ்வளவு தியாகம் செய்கிறார் என்பதை வெளிப்படையாக காட்டுகிறது.

இந்த உணர்ச்சிபூர்வமான காட்சியை பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.  இந்த வீடியோ குறுகிய நேரத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. “அவர் பணம் சம்பாதிக்க ஓட்டுகிறார், ஆனால் அவர் மடியில் தான் சம்பாதிக்கிறார்” என்ற தலைப்போடு வெளியான இந்த வீடியோ, பலரின் இதயத்தையும் தொட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Rithu🐾 (@rithuuuuuu._)

“>

நெட்டிசன்கள் இந்த வீடியோவிற்கு பெருமளவில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். “என் அப்பாவும் இதுபோல் ஆட்டோ ஓட்டுவார், மிஸ் யூ அப்பா”, “தந்தையர்கள் உண்மையான சூப்பர் ஹீரோக்கள்”, “குடும்பத்திற்காக ஒருவர் செய்ய முடியாதது எதுவும் இல்லை” என பலர் பாராட்டி பதிவிட்டுள்ளனர். ஒரு தந்தையின் அன்பும் போராட்டமும் எவ்வளவு வலிமையானது என்பதை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.