செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பொத்தேரி ஜி.எஸ்.டி சாலையில் நேற்று காலை ஆம்னி பஸ் ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் கண்ணிமைக்கும் நொடியில் முன்னாள் சென்ற கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த கார் அதற்கு முன்னால் சென்ற லாரியில் மோதி பின்பக்கத்தில் அடியில் சிக்கிக் கொண்டது. இந்நிலையில் லாரி அதற்கு முன்னால் சென்ற வேன் கார் மீது மோதியுள்ளது. இதனால் அடுத்தடுத்து ஆம்னி பஸ், லாரி, கார், வேன், கார் என ஐந்து வாகனங்கள் மோதி கொண்டதில் ஆம்னி பஸ் முன்பக்கம் சேதமடைந்து கண்ணாடிகள் நொறுங்கியுள்ளது.

மேலும் காரின் பின்பக்கம் சேதமடைந்தது. முன்பக்கம் லாரிக்கு அடியில் சிக்கியதில் நசுங்கியுள்ளது. அதேபோல் லாரி, வேன் மற்றொரு கார் போன்றவையும் இதில் பலத்த சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து எப்படி நடைபெற்றது? என்பது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.