சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நாதஸ்வரம் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சுருதி சண்முகப்பிரியா. இவருக்கு அரவிந்த் சேகர் என்பவருடன் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அரவிந்த் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் பேசிய சுருதி, என் கணவர் அரவிந்த் என்னுடன் இல்லை என்பதை நான் உணரவே இல்லை. முன்பிருந்ததை விட தற்போது தான் அரவிந்த் மேல் அதிக காதல் உள்ளது. இரவு நேரங்களில் அரவிந்து போட்டோவை பார்த்து எனக்கு மட்டும் ஏன் இப்படி நடந்தது என்று பல இரவுகள் நான் அழுதுள்ளேன் என உருக்கமாக பேசியுள்ளார்.