இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் இந்த திடீர் மறைவு திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் காலமான பவதாரிணி உடல் தற்போது சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் பின்னணிப் பாடகி பவதாரிணியின் மறைவு மிகவும் வருத்தம் தருகிறது. இளையராஜாவிடம் தொலைபேசியில் இரங்கல் தெரிவித்தேன் என நடிகர் ரஜினி தெரிவித்தார்.