தமிழ் திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளர் ஆன இளையராஜாவின் மகள் பவதாரிணி(47) நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். இலங்கையில் உள்ள ஆயுர்வேத மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இவருக்கு திடீரென தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் நிலையில் தோய்வு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். 1976 ஆம் ஆண்டு பிறந்த இவர் சென்னை ரோசரி மெட்ரிக் பள்ளியில் படித்தவர்.

தமிழில் 1995ஆம் ஆண்டு வெளியான ராசய்யா என்ற படத்தில் இடம்பெற்ற மஸ்தானா மஸ்தானா பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். சபரி ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இறுதியாக சிம்பு நடித்த மாநாடு படத்தில் யுவன் இசையில் இடம்பெற்ற மெஹரசைலா மெஹரசைலா என்ற பாடலை பாடியிருந்தார். இவரது மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் வாழ்த்தி உள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.