தென் மாவட்டங்களில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமைகளில் பெய்த பெருமழையால் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் பலரும் தங்களின் உடமைகளை இழந்தார்கள். அதுமட்டுமின்றி தங்களுடைய குழந்தைகளின் கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை இழந்தார்கள்.

இந்நிலையில் சான்றிதழ்களை இழந்த கல்லூரி மாணவர்கள் www.mycertificates.in என்ற இணையதளத்தில், கட்டணம் இல்லாமல் தற்காலிக சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.