ஆர்ஜேடி உடன் ஏற்பட்ட கருத்து மோதலால் முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவுடன் கைகோர்த்து மீண்டும் ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளார். இதனால் ஆட்சியை தக்க வைக்க லாலு – நித்திஷ் இடையே கடும் போட்டி நிலவி வருவதால் பீகார் அரசியலில் நொடிக்கு நொடி பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள் 15 பேரை இழுக்க லாலு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.