சரிவர செயல்படாதவர்களை மக்களவைத் தேர்தல் முடிந்ததும் கட்சியில் இருந்து நீக்கி விடுவேன்; யாரையும் நான் கேட்க தேவையில்லை என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒன்றிய செயலாளர்களின் நிலைமை என்ன என்பதை நானே பார்ப்பேன்; சரியாக இருந்தால் ஓகே, விட்டுவிடுவேன். இல்லை என்றால் தூக்கிவிடுவேன்; இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. முதலில் கட்சிதான் முக்கியம் என்று தெரிவித்தார்.