நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மயிலாடுதுறையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இதை அறிவித்தார். கிராமப்புற மக்கள் தங்களது வீட்டுமனைக்கு பட்டா வாங்குவதில் சில சிரமங்களை சந்திக்கின்றனர் என்பதை நான் அறிந்தேன்.

அதை இணைய வழி மூலமாக எளிமையாக்குவது தான் இந்த புரட்சிகரமான திட்டம் ஆகும் என தெரிவித்தார். மேலும், குத்தாலம் வட்டாரத்தில் வானாதி ராஜபுரம் மற்றும் அரையபுரம் வாய்க்கால் பாசன உழவர்கள் பயன்பெறும் வகையில், கடலங்குடி கிராமத்தில் ரூ.2.40 கோடி செலவில் படுக்கையினை அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.