ஈரோடு கிழக்கு தொகுதிகளை தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம் உட்பட 106 பேர் தங்கள் ராஜினாமா கடிதத்தை ஓபிஎஸ்-க்கு அனுப்பி உள்ளனர். இது ஓபிஎஸ்- க்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ராஜினாமா செய்தவர்கள் இபிஎஸ் அணியில் சேர்வார்களா,வேறொரு கட்சியில் இணைவார்களா என்பது தான் அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பான செய்தியாக உள்ளது