ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தண்டிக்கப்பட்டு, 2022ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சாந்தன் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 27ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட  நிலையில் இன்று காலை7.50 மணிக்கு  உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து சாந்தனின் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில், எம்பார்மிங் செய்யப்பட்டு இலங்கையில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

விடுதலை ஆன பிறகு, திருச்சி சிறப்பு முகாமில் இருந்து வந்த சாந்தன், அவரது சொந்த நாடான இலங்கை திரும்புவதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த நிலையில், இலங்கையில் உள்ள தாயை உயிருடன் இருக்கும் போதே பார்க்க முடியாமல், தமிழகத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.