நாடு முழுவதும் தற்போது குளிர்காலம் தொடங்கி இருக்கும் நிலையில் டெல்லி உத்திரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் அதிகளவில் பனிபொழிவு இருந்து வருகிறது. இதனால் பெரும்பாலான  மாநிலங்களுக்கு ஜனவரி 15ஆம் தேதி வரையிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு கடும் குளிரின் காரணமாக ஜனவரி 31 ஆம் தேதி வரை பள்ளி நேரத்தை மாற்றியமைப்பதற்கு அரசு அறிவித்துள்ளது.

அதாவது  5 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 3:30 மணி வரை, 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை பள்ளியில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் வழக்கமான பள்ளி நேரத்தை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.