கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த அருண் என்பவரது மகன் நிகில் தனது நண்பர்களான கோகுல், நித்தின் உள்ளிட்ட ஆறு பேருடன் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் கடற்கரை அருகே நண்பர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது நித்தின், கோகுல், நிகில் ஆகிய மூன்று பேரையும் கடல் அலை ஒன்று இழுத்துச் சென்றது.

இதனால் நண்பர்கள் கூச்சலிட அக்கம் பக்கத்தினர் நித்தின் மற்றும் கோகுலை மீட்டனர். ஆனால் நிகில் அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். இது குறித்த தகவல் அறிந்த ராஜாக்கமங்கலம் போலீசார் மற்றும் கடலோர காவல் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.