கடலூர் மாவட்டம் செல்லாங்குப்பம் அருகே குழந்தை உட்பட 4 பேர் தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர்..

கடலூர் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட செல்லாங்குப்பம் பகுதியில் தமிழரசி என்பவர் தனது கணவர் பிரகாஷ் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்த சூழலில் தமிழரசியின் சகோதரி தனலட்சுமிக்கும்,  அவரது கணவர் சத்குருவுக்கும் குடும்ப தகராறு வந்துள்ளது.. இதனால் தனலட்சுமி சத்குருவை பிரிந்து சகோதரி தமிழரசி வீட்டிற்கு வந்து தங்கி உள்ளார். இது சம்பந்தமாக  சத்குரு மீது தனலட்சுமி புகார் அளித்துள்ளார்.. இந்த கோபத்தின் காரணமாக சத்குரு இன்று திடீரென தமிழரசி வீட்டுக்கு வந்து தனலட்சுமியை பழிவாங்கும் நோக்கில் முதலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததற்காக சொல்லப்படுகிறது..

இதனை தடுக்க சென்ற தமிழரசி, தமிழரசியின் குழந்தை ஆசினி,  தனலட்சுமி, தனலெட்சுமி குழந்தை மற்றும் சத்குரு மீதும் அந்த பெட்ரோல் விழுந்ததாக சொல்லப்படுகிறது. இதில் தற்போது தமிழரசி உயிரிழந்துள்ளார்.. தமிழரசி  குழந்தை ஹாசினி உயிரிழந்துள்ளது. தீ வைத்து கொளுத்த முயற்சித்த சத்குரு உயிரிழந்தார்.. தனலட்சுமியின்   4 மாத குழந்தை என 4 பேர் பலியாகியுள்ளனர்.. அதாவது, 2 கை குழந்தை, தமிழரசி அதன் பிறகு கொலை செய்ய வந்ததாக கூறப்படும் சத்குரு இவர்கள் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.. மேலும் அந்த வீட்டில் உள்ள இருவர் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் சொன்ன தகவல் அடிப்படையில் தான் சத்குரு தான் பெட்ரோல் ஊற்றி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இரண்டு கை குழந்தைகள் ஒரு பெண் மற்றும்  பழிவாங்கும் நோக்கில் செயல்பட்ட சத்குருவும் அதில் தீக்காயம் ஏற்பட்டு உடல் முழுவதும் எரிந்து அவரும் உயிரிழந்துள்ளார்.

இதனால் தற்போது 4 பேரின் உடலையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அது மட்டுமில்லாமல் தொடர்ந்து விசாரணை என்பது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர் எதற்காக பெட்ரோல் வாங்கி வந்தார்? கொலை செய்யத்தான் வாங்கி வந்தாரா?  வேறு எதற்காக  வாங்கி வந்தார் என  தற்போது அடுத்த கட்ட விசாரணை நடந்து வருகிறது.. தொடர்ந்து இந்த பகுதி மக்கள் குடும்ப தகராறு காரணமாக சத்குரு பழிவாங்கும் நோக்கில் தான் இதை செய்ததாக கூறுகின்றனர்..

ஆனால் முழுமையான தகவல் தெரியவில்லை.. சத்குரு கோவத்தில் தான் உள்ளே வந்ததாக அந்த பகுதி மக்கள்   கூறுகிறார்கள். அதேபோல காயமடைந்த தமிழரசியின் தாய் அங்குதான் இருந்துள்ளார்.. அவர் கொடுத்த தகவல்
அடிப்படையில் தான் தெரியவந்துள்ளது. சத்குரு மனைவி தனலட்சுமி –  கணவர் சத்குரு இருவருக்கும் குடும்ப தகராறு இருந்துள்ளது. தனலட்சுமி காவல்நிலத்தில் கணவர் மீது புகார் கொடுத்துள்ளார்.

தனலட்சுமி சத்குரு மீது புகார் கொடுத்ததால் அந்த விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் இந்த கோபத்தின் காரணமாக தான் சத்குரு தனலட்சுமியை பலியான நோக்கில் இதை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. தனலட்சுமி தீக்காயத்துடன் மருத்துவமனையில் இருக்கிறார்..  அவரிடம் போலீசார் வாக்குமூலம் வாங்கி வருகின்றனர். தொடர்ந்து என்ன நடந்தது என தனலட்சுமியிடம் முழு விசாரணை நடத்திய பிறகு தான் தெரியவரும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது..