ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும் சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் என்பதால் பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் டீ போட்டு வாக்கு சேகரித்த சம்பவம் நடந்துள்ளது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இஸ்திரி செய்தும், கடையில் டீ போட்டும் தென்னரசுவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இவர் டீ ஆத்தும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.