மும்பையில் கடன் வசூல் செய்யும் முகவர் ஒருவர், அடையாள அட்டையை கேட்டதற்காகவும், அனுமதியின்றி வீட்டிற்குள் நுழைந்ததற்காகவும் குடியிருப்புவாசி ஒருவரைத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதைத் தொடர்ந்து, தனியார் நிதி நிறுவனங்களின் அத்துமீறல்கள் குறித்து பொதுமக்களிடையே காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.
மேலும் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டாலும், ஒருவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைவதற்கும், உடல்ரீதியான தாக்குதலில் ஈடுபடுவதற்கும் சட்டத்தில் இடமில்லை என்று சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
🚨Bank Harrasamnet: Bajaj Finance Recovery Agent Caught In Heated Confrontation In Residential Society – Viral video
This recovery agent entered the society and things got heated. When questioned about proper id and authorisation, the situation turned aggressive from both… pic.twitter.com/6BriLHXOL9
— Ramesh Tiwari (@rameshofficial0) May 13, 2026
“>
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபர், முகவரிடம் உரிய அடையாளச் சான்றுகளைக் கோரியதே மோதலுக்குக் காரணமாக அமைந்துள்ளது. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் விதிமுறைப்படி, கடன் வசூல் முகவர்கள் கண்ணியமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்றும், வாடிக்கையாளர்களை அச்சுறுத்தக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி பலமுறை எச்சரித்துள்ளது.
இருப்பினும், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்வது கடன் வாங்கியவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட முகவர் மற்றும் அந்த நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
