மேற்கு வங்க மாநிலத்தை கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பது பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளன. முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இதேபோன்று மற்றொரு இரண்டு வயது சிறுமியும் உயிரிழந்துள்ளார். ஆனால் இதுகுறித்த முதற்கட்ட அறிக்கையின்படி, இந்த குழந்தைகள் அனைவரும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மிகவும் எடை குறைவாக இருப்பதாகவும், ஒருவர் தீவிர இதய பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவமானது அந்த மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.