மராட்டியம் பஹல்கர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அந்த பகுதியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பராமரிப்பு (House Keeping) பிரிவில் பணிபுரிந்து வந்தார். இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை பணிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை தேடியுள்ளனர். அப்போது அச்சிறுமி தன் சகோதரனின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார். அதாவது, தன்னை யாரோ கடத்தி விட்டதாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனே போலீசில் புகாரளித்தனர். அதன்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் செல்போன் எண்ணை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சிறுமி கடத்தல் நாடகமாடியது தெரியவந்திருக்கிறது. சிறுமி தன் காதலனுடன் மும்பையிலிருந்து விமானம் வாயிலாக கொல்கத்தா சென்றுள்ளார். காதலன் உடன் சிறுமி விமானம் மூலம் கொல்கத்தா சென்றுவிட்டு தன்னை யாரோ கடத்தியது போன்று நாடகமாடியுள்ளார். சிறுமியின் கடத்தல் நாடகத்தை அறிந்த மும்பை காவல்துறையினர் சிறுமி மற்றும் அவரது காதலனை தேடி கொல்கத்தா சென்று உள்ளனர்.