கடக ராசி அன்பர்களே,

இன்று கண்டிப்பாக தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தன வரவை பெருக்கிக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பொறுமையுடன் இருப்பது நல்லது. தக்க சமயத்தில் சில விஷயங்களை யோசிக்க வேண்டி இருக்கும். நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்று தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் நடக்க வேண்டும். மாற்று இனத்தவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். சங்கிலித் தொடர் போல வந்த கடன் சுமை கண்டிப்பாக குறையும்.

இன்று உடல் நலம் சீராகி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். இந்த தொழில் வியாபாரம் இதமாக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு தாமதப்பட்டாலும் கையில் வந்து சேர கூடும். தொழில் வியாபாரம் பற்றிய கவலைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணியை செய்ய வேண்டி இருக்கும் .பேச்சு திறமையால் மேலிடத்தில் இருப்பவர்களிடம் நல்ல பெயரை பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாக இருங்கள். கொடுக்கல் வாங்கல்களை சீர்படுத்திக் கொள்ளுங்கள்.

இன்று யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். யாருக்கும் எந்த உதவியும் செய்ய வேண்டாம். பெண்களுக்கு இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். இன்று ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கோவில் குளத்திற்கு சென்று வருவீர்கள். இன்று மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். பெற்றோர் சொல் கேட்டு நடக்க பாருங்கள். விளையாடும் போது கவனம் தேவை. சிந்தித்து செயல்பட்டால் வெற்றி காணலாம். இன்று முருக பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  மேற்கு

அதிஷ்ட எண்  :  மூன்று மற்றும் ஐந்து

அதிஷ்ட நிறம்  :  வெள்ளை மாற்றும் பச்சை நிறம்