மேற்கு வங்கத்தில் உள்ள கங்கை ஆற்றை, பொதுமக்கள் குளிக்க தகுதி இல்லாத இடமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.  

மேற்கு வங்கத்தில் கங்கையில் நீராட வேண்டாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கங்கை  கங்கை நீரை ஆய்வு செய்ததில், நீரில் ஃபெகல் கோலிஃபார்ம் பாக்டீரியா அளவு அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டது. தினமும் 258.67 மில்லியன் லிட்டர் கழிவுநீர் நதியில் கலப்பதால், அப்பகுதி மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறிய தீர்ப்பாயம், உடனடியாக அதை தடுக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தவறினால் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.