தமிழக அரசால் வழங்கப்படும் ஔவையார் விருதுக்கு சிறந்த சேவை புரிந்த பெண்கள் வருகின்ற டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த பெண்கள் தமிழக அரசால் வழங்கப்படும் ஔவையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இளையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் சுயவிவரம் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் புகைப்படம், தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் விவரம் அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

பெண்களின் சேவையை பாராட்டி பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி தொகுப்பு மற்றும் சேவை செய்ததற்கான அறிக்கை உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை டிசம்பர் 10ஆம் தேதி மாலைக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.