தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த வாரம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில் தேர்வு தேதி குறித்து அதிகாரிகள் மட்டத்தில் காணொளி மூலமாக அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ள நிலையில் அதன் பிறகு இன்று மாலைக்குள் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.