சென்ற வருடம் நவ,.4 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான வழக்கின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் அடிப்படையில் அனைத்து மண்டல EPFO அலுவலங்களுக்கும் சுற்றறிக்கையை  இபிஎப்ஓ அனுப்பி இருக்கிறது.

கடந்த 2014 ஆம் வருடம் செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு பின் ஓய்வு பெற்றவர்கள், ஏற்கெனவே பணியில் உள்ள ஊழியர்கள் போன்றோரின் ஊதியம் இபிஎஸ் 1995 வரைமுறைக்கு அப்பால் இருந்தாலும், அவர்களும் அதிக ஓய்வூதியத்துக்காக விண்ணப்பிக்கலாம்.

அதற்குரிய விதிகள் தேவையான ஆவணங்களையும் EPFO வெளியிட்டு உள்ளது.  இதற்கு முன் ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்காத, அதே நேரம் தகுதியான நபர்களும் ஓய்வூதியத்துக்காக விண்ணப்பிக்கலாம். இதற்குரிய காலக்கெடு வருகிற மார்ச் 3 ஆம் தேதியோடு முடிகிறது.