ஹரியானா மாநிலத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை அம் மாநில முதல்வர் மனோகர் லால் கட்டால் தாக்கல் செய்தார். இவர் நிதி அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கிறார். இவர் ரூ. 1,83,950 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் தாக்கலின் போது முதல்வர் புதிதாக எந்த ஒரு வரியும் விதிக்கப் போவது கிடையாது என அறிவித்தார்.

அதன் பிறகு ஓய்வூதியம் தொடர்பான முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டார். அதன்படி சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்தை 2500 ரூபாயிலிருந்து 2750 ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளார். மேலும் பசு பாதுகாப்பு ஆணையத்திற்கான நிதியை 40 கோடியில் இருந்து 400 கோடியாக உயர்த்தியும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.