ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் ஓய்வூதியதாரர்களுக்குரிய நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. ஓய்வூதியர்கள் ஓய்வுபெற்ற மாதத்தில் நேர்காணல் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது. அதன்பின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும் நேர்காணலில் பங்கேற்பதற்கு அனுமதி தரவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில் கருவூலம் மற்றும் கணக்கு துறை சார்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தாரர்கள் வாழ்வு சான்றிதலுக்கான நேர்காணலை எந்த மாதத்திலும் தங்கள் விருப்பத்தின் படி செய்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதோடு ஒவ்வொரு ஓய்வூதியதாரர்களுக்கும் எந்தெந்த மாதம் நேர்காணல் செய்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்தான விபரங்களை அவரவர் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றும் http://www.karuvoolam.tn.gov.in/ என்ற கருவூலத்துறையின் இணையதள முகவரி பக்கத்தின் வாயிலாக ஓய்வூதியதாரர்கள் நேர்காணல் பற்றி அறிந்துக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.