ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் அரிசிக்கு பதிலாக பணம் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அரிசி கொள்முதல் செய்து சப்ளை செய்யும் வரை கிலோவுக்கு ரூ.34 வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், வறுமை கோட்டிக்கிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அரிசி கையிருப்பு இல்லாததால், பணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.