அதிமுக கட்சியின் முன்னாள் எம்பி ப.குமார். இவர் திருச்சி தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு வாக்குச்சாவடிக்கு ஓட்டு போடுவதற்காக சென்ற நிலையில் ஓட்டு போடாமல் வெளிநடப்பு செய்தார்.

அதாவது வாக்குச்சாவடியில் ஓட்டு போடுவதை வீடியோ எடுக்க கேமராமேன்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கோபடைந்த அவர் விஐபிகளை வீடியோ எடுக்க கூடாது என்ற ரூல்ஸ் இருக்கிறதா என அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார். மேலும் அங்கிருந்து அவர் ஓட்டு போடாமல் கிளம்பிவிட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.