தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் புதிய வசதியை ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி வீட்டில் இருந்தபடியே உங்களுடைய வாக்குச்சாவடியில் மக்கள் கூட்டம் உள்ளதா? எத்தனை பேர் நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதை எளிதில் தெரிந்து கொள்ள முடியும். அதற்காக https://erolls.tn.gov.in/Queue/ என்ற இணையதளத்திற்கு சென்று உங்களுடைய வாக்குச்சாவடிகளின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதன் மூலமாக உங்களது வாக்குச்சாவடி நிலவரத்தை நீங்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம்.