கோலிவுட் சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமாகி பின் “ஜீவா” உள்ளிட்ட தரமான வெற்றி படங்களை டைரக்ட்டு செய்தவர் சுசீந்திரன். இதையடுத்து நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். இவர் கோவை தனியார் கல்லுாரியில் நடைபெற்ற தென்மாநில அளவிலான பதிவுகள் குறும்பட விழாவில் கலந்துகொண்டார். அந்த விழாவில் சுசீந்திரன் பேசியதாவது “என் முதல் குறும்படத்தை சென்ற 2003-ஆம் வருடம் இயக்கினேன். அப்படத்தை திரையிட எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனினும் இன்றைய மாணவர்கள் எடுக்கும் குறும்படங்களை திரையிட பல வாய்ப்புகள் கிடைக்கிறது. ஓடிடி தளம், இயக்குனர்களுக்கு புது களமாக மாறி இருக்கிறது” என அவர் பேசினார்