எல்ஐசி நிறுவனமானது சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கு ஏராளமான பாலிசி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலமாக மக்கள் தங்களுடைய எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ளலாம். இந்த திட்டங்களில் ஒன்றுதான் ஜீவன் சாந்தி பாலிசி திட்டம். இது ஒரு ஓய்வூதிய திட்டம் ஆகும். இதன் மூலமாக வயதான காலத்தில் பண பிரச்சனை இல்லாமல் வாழ முடியும். இது ஒரு வருதடாந்திர திட்டம். ஏதேனும் ஒரு காரணத்தால் வேலையில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற வேண்டும் என்று விரும்பினால் இந்த பாலிசி அந்த நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த திட்டத்தில் இரண்டு வகையான விருப்பத்தை பெறலாம். முதல் விருப்பத்தின் கீழ் ஒருவருக்கு மட்டுமே ஓய்வூதிய பலன் கிடைக்கும் இரண்டாவது விருப்பத்தின் மூலம் இரண்டு பேர் ஓய்வூதிய பலனை பெறலாம். இந்த திட்டத்தில் 30 முதல் 79 வயது வரை உள்ளவர்கள் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் முதலீட்டாளர் குறைந்தபட்சமாக 1.50 லட்சம் முதலீடு செய்ய வேண்டும் அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை.

ஒருவர் ஒரே பாலிசி முதலீடு செய்தால் அவர் இறந்த பிறகு அந்த பணம் அவருடைய நாமினிக்கு கிடைக்கும் பாலிசிதாரர் உயிரோடு இருக்கும் வரை ஓய்வூதிய பலன் அவருக்கு தொடர்ந்து கிடைக்கும். இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்து 11 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மாதம் ஓய்வூதியம் பெறலாம்.