உத்தரபிரேச மாநிலம் கோரக்பூர் அடுத்த பிப்ரைச் பகுதியை சேர்ந்த சுமன் தேவி (34) – ராம் கோவிந்த் (35) தம்பதி, மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் சுமன் தேவிக்கு வேறு ஒரு ஆணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதுகுறித்து அறிந்த ராம் கோவிந்த் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் கள்ளகாதலனையும் தங்களுடன் வீட்டில் இருக்க அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் வீட்டை விட்டு சென்றுள்ளார் ராம் கோவிந்த். இதனையடுத்து மின் கம்பத்தில் ஏறி சுமன் தேவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட போலீசார் சமாதானப்படுத்தி கணவருடன் அனுப்பி வைத்தனர்.