அதிமுகவை கைப்பற்றுவதில் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே போட்டி நிலவியபோது, பாஜக மேலிடம் தலையிட்டு பரஸ்பரம் சமாதானப்படுத்தி வந்தது. இந்த விவகாரத்தில் நீதிமன்றமே இபிஎஸ்சுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேர்தலுக்கு பிறகு டிடிவி தினகரனிடம் அதிமுக செல்லும் என கூறியுள்ளார். இதை வைத்து, அவர் பக்கம் பாஜக சாய்ந்து விட்டது என்ற எண்ணம் அரசியல் ஆர்வலர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.