இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் காய்கறி வாங்குவது முதல் ரீசார்ஜ் வரை அனைத்துக்கும் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இதில் பலரும் ஒரே வங்கி கணக்கை பயன்படுத்தி பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இதனால் பல சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஒரே வங்கி கணக்கு மூலமாக டிஜிட்டல் பண பரிமாற்றத்தை செய்வதால் வங்கி கணக்குக்கு நாமே பிரச்சனையை தேடிக் கொள்கின்றோம்.

உங்களுடைய வங்கி கணக்கு ஹேக் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. நீங்கள் அதிகமாக ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்பவராக இருந்தால் மற்றொரு வங்கி கணக்கை திறந்து அதில் சிறிய பணத்தை மாற்றிக் கொண்டு அதனை வைத்து அன்றாட செலவுகளை நீங்கள் மேற்கொள்ளலாம். ஒரு வங்கி கணக்கு மட்டும் போதும் என்று நீங்கள் நினைத்தால் ஆன்லைன் பரிவர்த்தனைகளை அதிகம் செய்ய வேண்டாம். அதே சமயம் வங்கி மோசடிகள் குறித்து முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.