JEE முதன்மை தேர்வின் முதல் கட்ட தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. மாணவர்கள் jeemain.ntaonline.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தேர்வை சுமார் 12,25,529 பேர் எழுதினர். இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்வுகள் ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு மார்ச் இரண்டாம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.