அமெரிக்காவின் சியாட்டில் பகுதியை சேர்ந்த டெய்லர் டரண்டோ எனும் 37 வயது வாலிபர் பராக் ஒபாமாவின் வீட்டின் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்துள்ளார் இதைப் பார்த்து அவரை பின்தொடர்ந்த ரகசிய முகவர்கள் ஒபாமா வீட்டினுள் அந்த வாலிபர் செல்ல முயன்ற சமயத்தில் கைது செய்தனர்.

கைது செய்த போது டெய்லர் டரண்டோவின் வாகனம் ஒபாமா வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை தெரிந்து கொண்ட காவல் துறையினர் அதை சோதனை செய்தபோது பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்து பொருட்கள் கிடைத்துள்ளது. 2021 ஆம் ஆண்டு இந்த வாலிபர் மீது அமெரிக்காவின் கேப்பிட்டல் மீது தாக்குதலில் ஈடுபட்டதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.