ஒடிசா பாலசோர் மாவட்டம் பாஹாநகா பகுதியை சேர்ந்த உள்ளூர் மக்கள் ரயில் விபத்தில் பலியானவர்களுக்காக 10-வது நாள் சடங்கை மேற்கொண்டு உள்ளனர். கடந்த ஜூன் 2-ம் தேதி நடந்த ரயில் விபத்தில் பலியான அனைவருக்காகவும், 10-வது நாள் சடங்காக கிராமத்தை சேர்ந்த 116 பேர் தங்களது தலையை மொட்டையடித்து குளத்தில் குளித்து இறுதிக் காரியத்தை செய்துள்ளனர்.

ஒடிசா ரயில் விபத்து குறித்து பஹானகா உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 5 பேரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உதவி ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் சிக்னல் பொறியாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.