மகப்பேறு மருத்துவ நிபுணரும் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், கர்ப்பிணி பெண்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதாவது மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க கர்ப்பிணி பெண்கள் இராமாயணத்தை படிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆர் எஸ் எஸ்- ஐ சார்ந்த அமைப்பின் “கர்ப்ப சன்ஸ்கார்” நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் பண்பட்ட குழந்தைகளை பெற்றெடுத்த கிராமங்களில் தாய்மார்கள் ராமாயணம் போன்ற இதிகாசங்களை படிப்பதை பார்த்திருக்கிறோம். மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.