சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து ஒடிசா செல்லும் விரைவு ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 8 புள்ளி 10 மணிக்கு புறப்படும் சந்திரகாச்சி அதிவிரைவு ரயில் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதனைப் போலவே பெங்களூரில் இருந்து ஹௌராவுக்கு காட்பாடி வழியாக செல்லும் ஹம்சாபர் ரயில் ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி வழியாக செல்லும் அதிவிரைவு ரயில் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் ராமேஸ்வரம் மற்றும் ஓகா விரைவு ரயில் நாளை நவம்பர் 3 திருப்பதி வழியாக செல்வதற்கு பதில் ஜோலார்பேட்டை, மேல்பாக்கம் மற்றும் ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.