ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ஹைதராபாத்தில் உப்பல் மைதானத்தில் வருகின்ற ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்று தீர்ந்து விட்டன. இதனால் டிக்கெட் விற்பனையை பேடிஎம் நிறுத்தியுள்ளது.

ஆனால் இது தவிர சில சைபர் கிரைம் குற்றவாளிகள் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்வதாக கூறி க்யூ ஆர் குறியீடுகளை அனுப்பி பணம் வசூல் செய்து வருகிறார்கள். இது போன்ற செய்திகளை நம்பவே வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.