RCB, KKR இடையிலான நேற்றைய லீக் ஆட்டத்தின் போது விராட் கோலியை கௌதம் கம்பீர் கட்டி அணைத்தார். சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில் அந்த வீடியோவை பார்த்த சுனில் கவாஸ்கர், தனக்கே உரிய பாணியில் ரியாக்ஷன் கொடுத்துள்ளார், அதாவது KKR அணிக்கு ஃபேர்பிளே விருது கிடைக்கும் என்று ரவி சாஸ்திரி கூறுகிறார். கோலி, கம்பீர் கட்டி அணைத்துக் கொண்டதற்காக ஃபேர்பிளே மட்டுமல்ல ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் என கூறியுள்ளார்.