பஞ்சாபிற்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், லக்னோ வீரர் மயங்க் யாதவ் (21) புதிய சாதனை படைத்துள்ளார். 155.8 கி.மீ வேகத்தில் பந்துவீசி, நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசிய பவுலர் என்ற பெருமையை பெற்றார். மேலும், அபாரமாக பந்துவீசிய அவர், 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனால், ரசிகர்கள் அவரை இந்திய அணியின் எதிர்காலம் என்று பாராட்டி வருகின்றனர்.