ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34-வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணை 19 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் எம்.எஸ் தோனிக்கு போட்டியில் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ‌ ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 5000 ரன்களைக் கடந்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை எம்.எஸ். தோனி படைத்துள்ளார். அவர் மொத்தம் 5023 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார். மேலும் 4369 ரன்களுடன் 2-ம் இடத்தில் பெங்களூர் அணியில் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் இருக்கிறார்.