கேரள மாநிலத்தில் பல ஐடி நிறுவனங்கள் சிறந்த முறையில் செயல்பட்டு வரும் நிலையில் கோடிங் தெரிந்த பலரும் அங்கு பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஐடி ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் கேரள அரசு புதிய போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி கோடிங் சம்பந்தப்பட்ட போட்டி ஒன்றை நடத்த உள்ள நிலையில் அந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட 100 பேருக்கு பரிசுகளை வழங்க உள்ளதாகவும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. விருப்பம் உள்ள கோடிங் நிபுணர்கள் www.top100coders.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் கூடுதல் விவரங்களை இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. எனவே தகுதி உடையவர்கள் விண்ணப்பித்து பரிசுகளை அள்ளிக் கொள்ளுங்கள்.