ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் ஜூன் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் மே 1ஆம் தேதிக்குள் தங்கள் அணி வீரர்களை அறிவிக்க வேண்டும் என ஐசிசி அறிவித்திருந்தது. அதன்படி நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்க ஆகிய அணிகள் தங்கள் வீரர்களை அறிவித்த நிலையில் தற்போது இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

அதன்படி கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா ‌(துணை கேப்டன்), சிவம் துபே, ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், எஸ்வேந்திர சாகுல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் மாற்று வீரர்களாக சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஸ் கான் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.