சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஆயில் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்த விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இதில் எத்தனால் சேமிப்பு கிடங்கு அருகே வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்த பெருமாள் என்ற ஊழியர் படுகாயமடைந்து உயிரிழந்தார். காயமடைந்த ஊழியர்கள் சரவணன், அரசு ஸ்டேன்லி மருத்துவமனையிலும், பன்னீர் என்பவர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து காரணமாக ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், ஊழியர்கள் அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.